நாட்டில் பேருந்து சேவைகள் முடங்கும் அபாயம்!
நாட்டில் சாரதி, நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக நாளாந்தம் 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும், அதற்கான ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இதுவரையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,200 பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed